October 20, 2010

சின்ன சின்ன எனக்குத் தெரிந்த சமையல் டிப்ஸ்


குறிப்புகள்

1. நிறையவே பேச்சுத் தமிழ்ல எழுதிருக்கேன். அப்போ தான் ரெசிபி எழுத வரும்.
2. எனக்கும் சமைக்கத் தெரியும் என்று நினைவு படுத்திக் கொள்ள இப்பதிவு...
3. மங்கையர் மலர், தோழி, சினேகிதி ன்னு தமிழ் பத்திரிகைகள் நியாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை.
4. ஏறக்குறைய தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு நான் எழுதிய டிப்ஸ் தெரிந்திருக்கும் :))))) சும்மா பொஸ்ட் கணக்குக்கு எழுதியதாக எண்ணி மன்னித்துவிடுங்கள்.

******கொழுக்கட்டை செய்ய வரவில்லையா?

கவலையை விடுங்கள். அரிசி ஊறவைத்து அரைக்கும் பொழுது ஈரமாக(தோசைமாவு பதத்துக்கு) அரைத்து, கிளறிப்பாருங்கள். பந்து போல் உருண்டு வரும். அப்புறம் சொப்பு செய்வது நம் கைவண்ணம் தான். குயவனின் ஆர்வத்தோடு மாவை எடுத்து மெல்லியதாய் செய்யுங்கள். வாயில் போட்டால் கரையும் கொழுக்கட்டை தயார்.

******பாகற்க்காய் செய்தால் குழந்தைகள் ஓடுகிறார்களா?

பாகலை பாதியாய் வெட்டி, கொட்டை எடுத்து அதில் வெங்காயம் தக்காளி ஸ்ட·பிங் வைத்து நூல் போட்டு கட்டி, பின் வதக்குங்கள். சுவையான பாகல் தயார். 'அம்மா எனக்கு தினமும் பாகல் தான் வேணும்ன்னு அடம் பிடிப்பாங்க குழந்தைகள்'

******குடைமிளகாய் ஸ்ட·பிங்க்கு,

முழுதாய் பிளக்காமல், மேல் காம்பு மட்டும் எடுத்து, உள்ளே ஸ்ட·ப் செய்து சமையுங்கள். குண்டு குண்டாய் குடைமிளகாய் சமைத்த பின்பும் கண்கவரும்(நாக்கையும் கவரும்)

******வட இந்திய சமையல் செய்யும் பொழுது(ஒரு பஞ்சாபி தோழி கூறியது)சிறிதே சிட்டிகை(அரை ஸ்பூன்) சர்க்கரை சேருங்கள். காரத்தை தூக்கிக் காண்பிக்கும்.

******முருங்கைக்காயில் ரசமும் வைக்கலாம்.

தக்காளியுடன் ஐந்து பீஸ் பிஞ்சு முருங்கை நறுக்கிப் போட்டு செய்து பாருங்கள். வாசனையும் ருசியும் ஊரைக்கூட்டும்.

******பரோட்டா செய்யும் பொழுது ( உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காலிஃபளவர் எதுவாக இருந்தாலும்)

ஸ்ட·பிங் dry ஆக இருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மூள்ளங்கி பரோட்டாவுக்கு, அதன் தண்ணீரைப் பிழிந்து அதிலேயே மாவு பிசையலாம். தனியாப்பொடி, ஜீரகப்பொடி தவிர, கைநிறைய நறுக்கிய கொத்துமல்லித் தழை சேர்த்து ஸ்ட·பிங் செய்து பரோட்டா செய்தால், எல்லோரும் பாராட்டுவர். நிமிடத்தில் காலியாகிவிடும். குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவர்.

******வெங்காயம் நறுக்கினால் அழுகை வருகிறதா?

இனி வெங்காயத்தை நீரில் அலம்பிவிட்டு நறுக்குங்கள். oxidize ஆவதால் நிகழும் அழுகை குறையும்.


********ஆரோக்கியத்தை வரவேற்கலாமே!**********

!!!!வேகவைத்த தண்ணீரை கீழே கொட்டாதீர்கள். அதில் சத்து அடங்கியிருக்கிறது. முடிந்தால் வேறெதிலாவது சேருங்கள். இல்லையெனில் குடித்துவிடுங்கள்.

!!!!கீரை சமைத்து இறக்கி வைத்த பின்பே உப்பு போடுதல் நலம். உப்பு, கீரையில் கரையும் பொழுது உண்டாகும் சில ரசாயன மாற்றங்களைத் தவிர்க்கலாம்.

!!!!முடிந்தவரை, artificial drinks(coke etc), preservatives இருக்கும் packed foods போன்றவற்றை வாங்காதீர்கள். வாங்கும் முன், கலரோ, ப்ரிசர்வேடிவோ இருக்கா எனப் பார்த்து வாங்குங்கள்.

!!!! தினம் இரு பல் பூண்டு, முழுங்கி வாருங்கள், fatal முதல் சாதாரண வியாதி வரை எதுவுமே அண்டாது(பி.பி கூட ;))

No comments:

Post a Comment