December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (இறைவனுடன் என் உறவு)

இறையின் தத்துவத்தை நாம் ஒவ்வொருவரும் புரிதலுக்கு ஏற்ப ஒவ்வொரு விதமாக கையாள்கிறோம். இறையைத் தன்மைக்கு மனித உருவேற்றி அதனை பவ்யத்துடன் அணுகுவது ஒரு முறை என்றால், அவனையே பக்தியுடன் அணுகுவது இன்னொரு முறை. அதனையே பயத்தோடு அணுகுபவனும் உண்டு. நம் வாழ்வில் சந்திக்கும் நபர்களிடம் நாம் காண்பிக்கும் அன்பும், நாம் அவர்களை விளிக்கும் சொற்களும் நம் உறவின் ஆழத்தை பொருத்தே அமைகிறது.

இறைவனை தந்தை/தாய்/தோழன்/காதலன்/வேலைக்காரன் என பல உருவில் நெருங்கலாம். . திருமிழிசை ஆழ்வார் இறைவனுக்கு தொண்டாற்றும் கிழவிக்கு இறைத்தத்துவத்திடம் நமக்கிருக்கும் ஆழத்தையும் அன்பையும் பொருத்தே நம் உறவு அமைகிறதுஇளமையைக் கொடுத்தார். அவள் அழகில் மயங்கிய அரசன் தனக்கும் இளமை வேண்ட, ஆழ்வாரின் அதை சீடனே மறுத்துவிடுகிறான். அவனை நாடுகடத்திய விஷயம் கெட்டு திருமிழிசை ஆழ்வாரும் அவனுடன் புறப்படுகிறார். அப்பொழுது பாம்பின் படுக்கையில் இருக்கும் திருமாலையும் பார்த்து 'உனக்கு மட்டும் இங்கென்ன வேலை, வா என்னுடன்" என்று ஆணையிடுகிறாராம். அதை கெட்டு பெருமாளும் அவருடன் சென்று விட்டதால் அவருக்கு "சொன்னவண்ணம் செய்த பெருமாள்" என்ற திருநாமமும் வழங்கப்பெற்றது.

சுந்தரர் கடவுளை தூது அனுப்பினார். சிவன் பக்தருக்காக பிட்டுக்கு மண் சுமந்தார். பக்தர்களுக்காக இறைவன் செய்யாத விடயம் இல்லை. ஆனால் எப்படிப்பட்ட பக்தர்களுக்கு? என்பது கேள்வி.

இறைவன் நெருங்கியவன் ஆகிவிட்டான். ஒருமையில் விளிக்கும் தோழமை. ஏசும் உரிமை எல்லாம் பெற்று விட்டோம். அப்படியென்றால் அவனை உரிமையோடு கேட்கலாமே "எனக்கேன் இதைச் செய்தாய்?" "எனக்கேன் இதைச் செய்யவில்லை" "என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்" என்று குமுறலாமே?! அது பக்தியா என்றால்...இல்லை. முதிர்ச்சி அடைந்த பக்தியின் அடையாளம் அதுவல்ல.

"எனக்கு எதை கொடுப்பது கொடுக்க மறுப்பது என்பது அவனுக்குத் தெரியும்" என்ற பற்றற்ற நிலையில் இறைவன் அளிக்கும் வாழ்வை அப்படியே ஏற்றுக்கொண்டுவிடுவது தான் பக்தியின் முற்றிய நிலை. இன்னும் சொல்லப்போனால் நம் வாழ்விற்கும் வளத்திற்கும் நாம் மட்டுமே பொறுப்பாளி. இறைவன் என்றொரு சுமைதாங்கி சுமக்கிறான் என்பதால் அவனிடம் நம் பாரத்தை போட்டு விட்டு, அவனை "ஏன் இதை மறுக்கிறாய், ஏன் இதை கொடுத்தாய்" என்று கேள்வி வேறு கேட்கிறோம்!

"நீ எதைக்கொடுக்கிறாயோ அதுவே உன் பிரசாதமாக ஏற்று வாழ்கிறேன்" என்று எந்த பக்தன் சொல்கிறானோ அவனுக்காக கட்டுப்பட்டு இறைவன் வருவான்.



மனிதனின் வாழ்கை விசித்திரமானது. சில விஷயங்கள் நம் புலனறிவுக்கு எட்டாதது. ஏன் தனிமனிதனின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள்? ஒருவன் உயர்ந்து நிற்க, இன்னொருவன் தாழ்ந்து சீரழிகிறேனே? பணத்தின் செழிப்பில் சிலர் சுக ஜீவனம் செய்ய, வறுமையில் சிலர் வதுங்குகின்றனரே? ஏன்? எதனால்? எப்படி சாத்தியம்? முடிவில்லாக் கேள்விகளுக்கு ஒரே பதில் மட்டுமே இருக்க முடியும்.

சிற்றறிவுக்கு எட்டாத விஷயங்கள் ஏனைய, பிரபஞ்ச ரகஸ்யங்களாக எங்கும் நிரம்பிக் கிடக்கிறது என்பதை தன்னடக்கத்துடன் ஒப்புக்கொள்வது ஒன்று தான் சாத்தியம். அதை "விதி" என்று ஒதுக்கி வைத்து நொந்துக்கொள்ளலாம். அல்லது சிந்தைக்கெட்டாத ஷக்தி என்று உயர்த்தி வைத்து வணங்கலாம். இல்லையெனில் புரியாத பொருளின் செயல்பாட்டுமுறை என்று விவாதிக்கலாம்.

எதுவாக இருப்பினும், அதன் முன், மனிதன் பலமிழந்து நிற்கிறான் என்பது உண்மை. அவனால் அதை வெல்ல முடியவில்லை. விஞ்ஞானம் அதன் முன் தோற்றுவிடுகிறது. எத்தனை பலம் கொண்டு போராடினாலும் அதை தவிர்க்கமுடியவில்லை.

கௌதமி என்பவள் தர்ம நெறிப்படி வாழ்கை நடத்துபவள். அவள் புதல்வனை பாம்பு கடித்து விடுகிறது. அவள்பால் உயர்ந்த மரியாதையும் கொண்ட அர்ஜுனகா என்ற வேடனுக்கு மிகுந்த கோபம் உண்டாகிறது. 'நீ எப்பேற்பட்டவள்! உனக்கா இப்படி ஒரு கதி நேர வேண்டும். எல்லாம் பாம்பு செய்த வினை' என நொந்துக் கொள்கிறான். பாம்பைக் கொல்ல முற்படுகிறான். பாம்போ தான் எவ்வாறு காரண கர்த்தாவாக முடியும் என வாதிடுகிறது. 'யமனின் உத்தரவின் பேரிலல்லவா நான் இயங்கினேன். நான் எப்படி பொறுப்பாவேன்.' என மறுத்துரைக்கிறது. யமனோ 'இது காலதேவனின் ஆணையன்றோ?! அவர் இட்ட கட்டளையை கடமையாக்கிச் செய்பவனே நான்' என்கிறான். 'அவரவர் கர்ம வினைக்கேற்ப பலன் அமைகிறது. அவனவனே தன் விதியை, வாழ்வை, நிர்ணயித்துக்கொள்ள இதற்கு நான் எப்படி கர்தாவாக முடியும்' என்கிறானாம் காலதேவன்.

அவனவன் வாழ்வுக்கும், நடவுக்கும், இருப்புக்கும் அவனவனே பொறுப்பு, அவனவனே கர்த்தா. விதை விதைத்தவனே அதன் பலனை அனுபவிப்பான் என்பதே ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தாய் இருக்கிறது. மஹாபாரத ச்லோகங்களில் அதன் முடிவில் வரும் ச்லோகம், ஜீவனின் சாரம்சத்தை விளக்குவதாய் அமைகிறது।



"ஆயிரமாயிரம் ஆடவரும், பெண்டிரும், பந்துக்களும், மித்ரர்களும், மாதாக்களும், புத்ரர்களும் இம்மண்ணில் இருந்தனர், இருக்கின்றனர், முடிவுறாத இழையாக தொடர்ந்த வண்ணம் இன்னும் வந்து கொண்டே இருப்பர். மனதுக்கு ஒவ்வாத வருத்தமுறச் செய்யும் சம்பவங்களும் நிகழ்வுகளும் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பயமுறுத்தும் நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இவற்றினுள் மூழ்கி தொலைந்து போகின்றவர்கள் அஞ்ஞானிகள். ஞானியோ சலனமற்றத் தெளிவுடன் தன் பயணத்தைத் தொடர்வான்."

கடவுள் நமக்கு நாமே வித்திட்டுக்கொண்ட கர்மங்களைக் கழிக்க பொறுமையை வழங்கியருள்கிறான். அவனை நொந்து கொள்வதில் என்ன பயன்!?

No comments:

Post a Comment