December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 ( பறவைகள் பேசுமோ?)

பட்சிகளுக்கும், ம்ருகங்களுக்கும், செடி தாவரங்களுக்கும் திரும்ப வார்த்தையால் அளவளாவ முடியாது பொனாலும், அவை தங்கள் சங்கேத அசைவுகளில் பதில் கொடுக்கும். நாம் சொல்வதை புரிந்து கொள்ளும் சாத்தியம் உண்டு. இதையும் தாண்டி அவர்கள் ஒலிக்கும் ம்ருக பாஷைகளைப் புரிந்தவர்களும் இருக்கின்றார்கள்.

இராமாயணத்தில் சுமந்திரர் கைகேயியிடம் "நீ உன் அன்னையைப் போல் அறிவற்று இருக்கிறாய்" என்று சீறுகிறார். கைகேயியின் தந்தைக்கு பட்சிகளின் மொழி புரியும் வரம் உண்டு. ஆனால் அவர் கேட்டதைப் பற்றி இன்னொருவருடன் பகிர்ந்தால் அது அவரது உயிர்க்கு ஆபத்தாக முடியும். ஒரு முறை அவை பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்து, புரிந்து இவர் சிரிக்க, அருகிலிருந்த அவரின் மனைவி சிரிப்பின் காரணத்தை கூறும்படி கேட்கிறாள். உயிரின் ஆபத்தை சுட்டிக்காட்டி இவர் மறுக்க, அவளோ அது பற்றிய கவலையின்றி விடாது நச்சரிக்க, அவளை தள்ளி வைக்க வேண்டியதாய் நிலைமை ஆயிற்றாம்.

ஜனஸ்ருதி என்ற அரசர் ஒரு ஞானியும் கூட. அவர் போய்க்கொண்டிருக்கும் போது "அவரை மறைக்காதே அவரின் ஞான ஒளி உலகெங்கும் பரவவேண்டும்" என்று இரு பட்சிக்கள் பேசிக்கொண்டதாய் புராணக்கதை கூறுகிறது. பறவைகள்/விலங்குகளுக்கும் பாஷை/மொழி/சங்கேத மொழி/ செய்கை உண்டு. அதைப் புரிந்தவர்கள் சிலர் இருந்தனர். அதை அறிந்துகொள்ளுதல் ஒருவகை கலை என்று எடுத்துக்கூறவே இக்கதைகள்.

No comments:

Post a Comment