December 15, 2009

சோ-வின் எங்கே பிராமணன் part1 (ஹிந்து மதத்தின் சனாதனம்)

ஹிந்து மதம் என்றால் ஹிந்துக்களின் மதம் என்று இன்றைக்கு எல்லோராலும் பொருளுணரப்பட்டாலும், ஹிந்து மதம் பெயரற்றது என ஏடுகளைப் புரட்டி நாம் அறியலாம். மதம் என்றால் சிந்தனை/நம்பிக்கை. 'சிந்து சமவெளி நாகரீகத்தை'த் தழுவிய மனிதர்களுக்கும் அவர்களின் நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் சிந்து நாகரீகம் என பிற்காலத்தில் பெயர்சூட்டப்பட்டு, பின் 'ஹிந்து / ஹிந்துத்துவம்' என மருவியது. மதத்திற்கென தனி பெயர் இல்லை. ஏன் இல்லை? ஹிந்து மதத்திற்கு 'மூலம்' கண்டுணர முடிவதில்லை.

அதனால் இதற்கு "சனாதன தர்மம்" எனப் பெயர். 'சனாதனம்' என்றால் தொன்று தொட்ட காலம் முதல் வழங்கு வந்த தர்ம நெறிகள். சனாதன தர்ம முறைகள் மட்டுமே இருந்து வந்த காலத்தில், பிறவொன்று அதற்கு ஒப்பாக / கூட்டாக இல்லாததால், தானே தனித்து தழைத்து வந்ததால், அதற்கு தனியொரு பெயர் தேவையிருக்கவில்லை. உலகெங்கும் உள்ள வரலாற்றுக் கல்வெட்டுக்களும், ஒட்டிக்கொண்டிருக்கும் பழக்கவழக்கங்களும், புழங்கிவரும் மொழிச்சொற்களுமே சான்று. எஹிப்து நாட்டில் "மித்ர வருண சாக்ஷியாக" என்று கி.மு 1300 முன்னாலே உரைக்கும் கல்வெட்டைக் காணலாம். மெக்சிகோ நாட்டில் நவராத்திரி நாட்களில் "ராம்-சீதா" என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது என்று தெரியவந்துள்ளது மேலும் அந்நாட்டில் சில இடங்களில் விநாயக விக்கிரஹங்கள் கண்டெடுக்கபட்டது. விஷு பண்டிகைக் காலத்தில், தெற்கு அமெரிக்காவில் ஆண்டிய மலைப்பகுதி பழங்குடியினர் "இன்காஸ்" என்ற பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

http://en.wikipedia.org/wiki/Inca_religion
http://www.myperu.org/fiestas_festivals_peru.html

உபநிஷதத்தில், ஆதாம் ஏவாள் கதைகளை நினைவூட்டும் வகையில், "ஜீவாத்மாவாக வரிக்கப்பட்ட ஒரு பறவை பழத்தைக் (ஜீவ ரசத்தை / உலக இன்பத்தை) களிக்க, அதை பார்த்து கொண்டு சாட்சியாக நிற்கிறதாம் பரமாத்மாவாக வரிக்கப்பட்ட இன்னொரு பறவை." சனாதன தர்மத்தின் சனாதனத்திற்கு எண்ணற்ற சாட்சிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment